Tuesday, May 17, 2011

கோபம் குறைய... காதல் வளர்க்க...!!!

அர்த்தமில்லாமல் பேசு...
ஆராயாமல் எதையும் செய்...
இன்பத்தை மட்டும் பார்...
இதயத்தை பரிமாற்று....
இமை கொட்டாமல் ரசி...
நினைவிழந்து போ...
கனவுகளை வளர்...
நித்திரையில்லாமல் தவி...
ருசியறியாமல் உண்....
பார்வையை கண்டு பரிதவி...
நாயை போல் அலை...
உறவினரை கண்டதும் சொல்லி கொள்ளாமல் தலையை மறை....
கவிதை கிறுக்கு..
நண்பனிடம் நயம் பேசு...
பர்சை காலியாக்கு...
பாதியளவு எடை குறை...
சிறியவினடம் வீரத்தை காட்டு....
அவள் தந்தையிடம் அடக்காமாக பேசு...
அநீதியை கண்டதும் சிங்கமென சீறு....

அன்போடு பழகு அவளிடம்.... ஆனால் அவளோ...
பரிவன்போடு பாசத்தை காட்டுவாள் தன் எதிர் கல கணவனிடம்...!!
தாடி வளர்... தோழியிடம் துயரத்தை கூறு... மாண்டு போ!!!

மறுபடியும் மண்ணில் பிறந்து... திகட்டி போகும் அளவிற்கு காதலி....
தீஞ்சு போகும் உடலினுள் ஆன்மா தீயும் வரை....

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment