Tuesday, May 17, 2011

விலகி போ!!!

தேர்வு எழுத முடியவில்லை...
தெம்பாய் ஒரு செயலையும் செய்ய முடிவதில்லை....!

என் தென்றலே....
தழுவாமல் தள்ளி போ!!!

உண்ண முடிவதில்லை...
உறங்க தோன்றவில்லை.....

உள்ளமே நிஜ உலகை விட்டு விட்டு....
மாய உலகை நோக்கி மாண்டு போ...!!

எண்ணங்களை ஏட்டிலே பதிக்க முடியவில்லை....
வண்ணங்களை வானிலிருந்து வசப்படுத்த முடியவில்லை....

திண்ணமாக சொல்கிறேன்....
பொன் திங்கள் நிலவே...
என்னை விட்டு நீங்கி போ...!!

ஒரு நாள் வேதனையோடு...
மறந்து போவேன்... உன்னையும்...
என் உயிரையும்...!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment