Friday, September 14, 2012


“தோற்பதொன்றும்  புதிதல்ல....
தோல்வி மட்டும் நிலையல்ல...!!!”

- கண்ணகி தாசன்

Monday, September 10, 2012

ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம்.... 
உண்மை தான்....
உன்னை இழந்தேன்....
என்னை மறந்தேன்... 
உணர்ந்தேன் உலகம் இதுவென....!!!

- கண்ணகி தாசன் -

மனையாளின் மாதுயர் தீரா, மனிதனோ யான்..... அல்லன்!!!
கொடும் மாக்களினையொத்தன்...!!!
இக் கொடும் பாவி எரிக்க தணல் வேண்டின்... தேவையில்லை!!!
அந்த பூங்குழலாள் எச்சம் என விட்டு சென்ற இப்பொல்லாத காதல் பிரிவு செய்யும் அதை....!!

- கண்ணகி தாசன் -
ஆதியிட்ட நாள் முதலாய்...
நான் பாதி நின்ற இப்பார் தன்னில்...
நாதியின்றி போனேன் யான்...
வியாதியென அவளின் காதல் என்னை விரயம் செய்ததினால்....!!!

-கண்ணகி தாசன்-

Sunday, September 2, 2012

உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??

ஆங்கிலேயனிடம் போராடி...

அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டனர் என் பாரதத்தை....

உண்மையில் சுதந்திரம் பெற்றோமா??

நாட்டுக்கு வேண்டுமானால் 65 வருடங்கள் நிறைவடைந்திருக்கலாம்...

விடியலை தேடி விழித்திருக்கும் என் நாட்டு மக்களுக்கு எப்போதோ???

- கண்ணகி தாசன் -