Tuesday, May 17, 2011

என் கடந்த கால வாழ்க்கை.....!! - முதல் பகுதி!!

அந்திவானில்...
அன்றலர்ந்த குருஞ்சியினது குரல்கேட்டு கொண்டிருந்த வேளையிலே...

வெண்ணிலவே வெட்கி தலை குனியும் அந்த சோகத்திலோர்...
சுகந்தனை.. உன் இரு விழிகளில் விளக்கேற்றி...
விளங்கவைத்து உன் விடியல் முகம்....!!

உந்தன் மனையின் உச்சிதனில்...
ஒன்றாய் அமர்ந்து, காலம் தன் கணக்கு முடிப்பதுக்கூட தெரியாமல்..
மெய்யன் நான் பொய்யுரைதேன்...
உன் பொழிவு முகம் கண்டதினால்....!!!

தினமும் ஆபயனை அள்ளிசெல்ல குவளை கொண்டு வருவாய்...
தித்திக்கும் செந்தமிழில் செம்மையாய் உரையாடினோம் இருவரும்....!!!

என் கண்களில் விழுந்த உன்னை...
என்னில் தேடித்தேடி தேவையை மறந்தே போனேன்...!!

அன்று ஒருநாள், என்னை கணிப்பொறியில் உட்படுத்த...
என் மனை வந்து சேர சிறிது தாமதமான தருணம் பார்த்து..

எனை பற்றி என் சோதரியிடம்  விசாரித்து...
என் காதல் மனதில் அசுரத்தனத்தை களையேடுத்தாய்.... எப்படி மறவேன் உனை...!!!

மட்டையில் என் மந்தத்தனம்.. மெத்தனமாய் பதிந்திருந்து...
கல்வி கண்ணை மட்டும் இமையடையாமல், இருந்த தருணம்...

அப்போது.. நான் உன்னை கண்டு ஈராறு மாதங்கள்...
மதங்கொண்ட யானை போல மதி மயங்கி சென்றிருக்கும்...

உன் ஒற்றைவார்த்தை அதிர்ச்சிக்குள்ளக்கியது எனை...!!

உன்னோடு பேசும் முன்னரே உன் ஓர விழி பார்வையை என்னில் விதைத்திருகிறாய்...
அப்போது தான் உணர்ந்தேன்... உன்னில் எனை உணரும் வலியை...
வாழ்வின் முதல் வசந்தம்...!!

காலங்கள் உருண்டோடுவது உணராமல்...
உயிரோடு உயிராக ஒட்டி வாழ்ந்தோம்...
நட்பின் போர்வையை போர்த்தி கொண்டு...!!

உன் புதுமனை புகுவிழாவில்...
பூவுக்குள் முகம்காட்டி புன்னகைத்தாய்....!!

உன் தோழிகள் இருப்பதுகூட அறிந்தும் அறியாமல்...
என்னோடு உரையாடினாயே..!

அடுத்த தினம்...
அந்தி மாலை பொழுது... பட்சிகள் கட்சிக்கூட்டம் போட்டது போல்...
ஒரு அழகான மரத்தின் உச்சியில் ஒரு குருவிகுடும்பம்...
கண்டுகொண்டே, கீழிறங்கும் போது...
காயமுற்றேன்... உன் புருவ வெட்டுகளால்....!!

காதலின் உச்சம்...
என் மனைக்கு வந்தாய்...
உன் இளைய சோதரனோடு.... என் வீட்டில் யாருமேயிலாத தருணம் பார்த்து...

இயந்திர விளையாட்டில் உன் தமையனிருக்க....

என் பழைய வசன கவிதைகளுக்கு.. வாழ்த்து பா பாடினாய்...
நாமிருவரும் முண்டாசு கவிஞனின் குயில் பாட்டில் திழைத்து கொண்டிருந்தோம் நேரம் போவது கூட தெரியாமல்..

ஒரு புறம் நானும், மறுபுறம் நீயும் தலை வைத்து கவனம் செலுத்தினோம் தொலை காட்சி பெட்டியில்..

உந்தை உன்னை அழைக்க... படம் பாதியில் நின்ற தருணத்திலிருந்து...
என் மனம் அலைபாய தொடங்கியது...!!

நீண்ட நேர தாமதத்தால் உந்தை உன்னை ஏசி விட்டு வெளியேற...
அத்தருணம், மனக்காயத்திற்கு மருந்தாக அறுதல் சொற்களை அள்ளி வந்தேன்..

உன் மனை மாடி படியில் நான் ஏற...
எனை காண னே இறங்கி வர... சற்றே வியப்பு இருவருக்கும்..!!

நான் நடந்த தவறிற்கு மன்னிப்பு கோர...
உன் வெண்டை விரல்களால் என் தலைமயிர் கோதி என் உடல் சூட்டை இன்னும் சுடேற்றினாய்...!!
என் வாழ்வின் இரண்டாம் பெண்ணின் தீண்டல்...!!

உணர்ச்சியை உள் வாங்கி..
இருவரும் இரவு வாழ்த்தை பரிமாறி.. பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றோம் உறங்க...!!!

அடுத்த தினம்.. இன்னுமொரு கார்கில் போர்...
ஆம்!! கிரிக்கெட் போர்...!! இந்தியனும் பாகிஸ்தானும்...

சிறு திருவிளையாடல் நிகழ்த்த எண்ணினாயோ என்னவோ...
பரங்கிதலையனாம் பாகிஸ்தானின் வெற்றிக்காக பந்தயம் கட்டினாய்...
நானும் எனை மறந்து... நம்மில் உள்ள உறவையும் மறந்து.. உன்னோடு வாக்குவாதமாய் போர் நிகழ்த்தி..
முடிவுக்கு வந்தோம்...

பாரதம் வெற்றி பெரும் என்றேன் நான்...
எனக்கு எதிர் மறையை நீ...!!

நான் வென்றால் பந்தயபனம் உறுதி... ஆனால்,
அதுவே நம் உறவுக்கு அது இறுதி!! உணர்ந்த மாத்திரத்தில், உணர்வற்று போனேன்..!!

ஈசனை எண்ணி இம்மை பற்றி தோற்க்க வேண்டினேன்... அங்குமோர் அதிரிச்சி எனக்கு...
எனக்கு முன்னே அவள்.. அவாலயத்தில்..!!

இறுதியாக என் வேண்டுகோள் பலித்தது...
பாரதத்தின் தோல்வி என்னை முதன்முதலாய் ஆரவரபடுத்தியது!!!

இத்தருண நிகழ்வுகளை மனதில் வைத்து கொண்டு என்னோடு மௌனம் சாதித்தாய் ஒரு சில தினங்கள்...!!
அப்போது தான் முதன்முதலாய் உறவுகளுக்காக ஏங்கினேன்...!!!

கைஜாலங்களால் என்னோடு உரையாடி, இறந்து போன என்னுயிருக்கு உணர்வூடினாய்..!!

கடும் வாக்குவாதம்...
ஈரெட்டாம் நாளாம் இரண்டாம் மாதத்தில்....
"இனி உன்னோடு பேசாமடந்தை போல வாழ ஆசைபடுகிறேன்!!"
என்று உரைத்து விட்டு வெளியேறினேன்...

அன்றைய தினம்... மாலையில் உன் சினம் தணிக்க...
என்னருமை தமிழால் கோர குடந்தை தீ விபத்தை...
குறைவில்லாமல் கவி வரைந்து ஆங்கில இலக்கண ஏட்டில்..
இறுக வைத்து உன்னிடம் சேர்க்க சொல்லி கொடுத்துவிட்டேன் உன் தமையனிடம்..

வீட்டின் மாடியில் நின்றுகொண்டு... இயற்கையின் அழகை ரசித்துகொண்டிருக்கும் தருணம்..
சாலையை கடந்து செல்லும் மின்னலாய் உன் புன்னகை பூத்த முகம்..!!
நானும் புன்முறுவல் பூத்தேன்...!!

சிறிது நேரத்தில்..
அந்த மகிழ்ச்சியில் நீ பேதை பருவத்திலிருந்து... மங்கை பருவத்தை எய்தினாய்!!

குதூகலம் தான் எனக்கும்...
உன்னை காண விழைந்து உன்மனை வர...
உந்தை என்னை வாசலிலேயே வரி தொடர்பாக பேச.. சிந்தனையேதும் இல்லாமல் பதிலளித்து வந்தேன்...

உள்தாளிட்ட கதவை திறந்தது...
நாணி நின்றாய் நீ...!!

அந்த நாணம் என்னை நயமாக களவாடியது....!!!

இது ஒரு சிறு பகுதி தான்!! இன்னும் தொடர்வேன் வரும் நாட்களில்!! பிறகு சந்திப்போம்...!! அடுத்த வாரம்...


- கண்ணகி தாசன் -





 

காதலித்து பார்!!!!

உலகமே இருண்டு விடும்...
இமைகள் இணைய மறுக்கும்...
உன் சுவாசம் தேடி வண்ணத்து பூச்சிகள் சிறகடிக்கும்...
அவள் தெருவே உனக்கு உலகமென தோன்றும்....
திழைக்காத அளவுக்கு தித்திப்பு உண்டாகும்...
நா கசக்கும்...
உதடுகள் உண்ண மறுக்கும்...
கல்வி எதிர் கரையில் மிதக்கு சிறு படகு போல தோன்றும்...
நண்பனை நயவஞ்சகன் போல பார்ப்பாய்...
அவளை காணாத போது கவலை வளர்ப்பாய்...
கண்டவுடன் துன்பம் தொலைப்பாய்.....
அவள் சகோரனோடு மிகுந்த பாசம் கொள்வாய்..
அவளின் நண்பனோடு பழகுவதை சந்தேக படுவாய்..
சந்தேகத்தால் சங்கடம் தேடுவாய்...
அவளை துறப்பாய்...
இறுதியாக தாடி வளர்ப்பாய்... தண்ணி அடிப்பாய்...
மிஞ்சி போனால் என்ன செய்ய முடியும் உன்னால்...???
என்ன செய்ய முடியும் உன்னால்...??? உயிரை விடுவாய்...!!!

காதலித்து பார்... தோற்பதற்காக...????

- கண்ணகி தாசன் -

மருந்து

நோய்க்கு மருந்து தேடி அலைந்தனர் என் பெற்றோர்..!!
என் நோய்க்கு அவள் தான் மருந்து என்பதை உணராமல்....!!

- கண்ணகி தாசன் -

கோபம் குறைய... காதல் வளர்க்க...!!!

அர்த்தமில்லாமல் பேசு...
ஆராயாமல் எதையும் செய்...
இன்பத்தை மட்டும் பார்...
இதயத்தை பரிமாற்று....
இமை கொட்டாமல் ரசி...
நினைவிழந்து போ...
கனவுகளை வளர்...
நித்திரையில்லாமல் தவி...
ருசியறியாமல் உண்....
பார்வையை கண்டு பரிதவி...
நாயை போல் அலை...
உறவினரை கண்டதும் சொல்லி கொள்ளாமல் தலையை மறை....
கவிதை கிறுக்கு..
நண்பனிடம் நயம் பேசு...
பர்சை காலியாக்கு...
பாதியளவு எடை குறை...
சிறியவினடம் வீரத்தை காட்டு....
அவள் தந்தையிடம் அடக்காமாக பேசு...
அநீதியை கண்டதும் சிங்கமென சீறு....

அன்போடு பழகு அவளிடம்.... ஆனால் அவளோ...
பரிவன்போடு பாசத்தை காட்டுவாள் தன் எதிர் கல கணவனிடம்...!!
தாடி வளர்... தோழியிடம் துயரத்தை கூறு... மாண்டு போ!!!

மறுபடியும் மண்ணில் பிறந்து... திகட்டி போகும் அளவிற்கு காதலி....
தீஞ்சு போகும் உடலினுள் ஆன்மா தீயும் வரை....

- கண்ணகி தாசன் -

அபாய அறிவிப்பு...!!

"கடவுளிடம் வரம் பெற்று...
காலம் தந்த பிள்ளைகளை....

காதல் என்ற கொடிய நோய்..
தாக்கி அழிக்கிறதாம்....!!! "

அறிவிப்பை கேட்டு கொண்டே அழித்தேன்...
என்னையும்... என்னுயிரையும்....!!

அடுத்த பிறவியலாவது ஒன்று சேர்வோம் என்ற நம்பிக்கையில்....!!!

- கண்ணகி தாசன் -

நீயிருந்தால்....

பூவாய் நீயிருந்தால்...
புன்னகையாய் நானிருப்பேன்...!!

புன்முறுவலோடு நீயிருந்தால்....
புகழாரம் பாடியிருப்பேன்....

புயலாய் நீயிருந்தால்....
அதில் வெந்து மடியும் புழுவாய் நானிருப்பேன்...!!

உடலாய் நீயிருந்தால்....
உருக்குலையாமல் பாதுகாத்திருப்பேன்.....!!

உயிராய் நீயிருந்தால்....
உந்தன் துதி பாடியிருப்பேன்...!!

கனவாய் மட்டுமே நீயிருந்தால்.... உளமார எழுதுகிறேன்...
கணவனோடு கண்மணியே நீ வாழ்க....!!!

- கண்ணகி தாசன் -
உதிக்கின்ற சூரியன் உறங்கும் வேளையில் கூட...
நான் உறங்குவதில்லை....

காரணம்...!!

கனவுகளில் வந்து காமத்தீ மூட்டுவாய் என்பதற்காக.....!!

-கண்ணகி தாசன் -

தயக்கம்!!!

உன்னை தேடி தேடி....
தேவைகளை மறந்தேன்.....!!

உன்னை வரைந்து வரைந்து...
வயதினை இழந்தேன்...

உன்னை பற்றி எழுதி எழுதி...
எண்ணத்தை துறந்தேன்....!!

உன்னை அனுதினமும் கண்டு கண்டு...
கனவை வளர்த்தேன்...!!

உன்னிடம் தயங்கி தயங்கி...
காதலை வெளிபடுத்தினேன்....!!

உன் தயக்கத்தை கண்டு...
தாடி வளர்த்தேன்...

முகத்தில் மட்டுமல்ல....
அகத்திலும் தான்...!!

"அகத்தின் அழகு முகத்தில் தானே தெரியும்....!!"

- கண்ணகி தாசன் -

கடன் !!!

கடன் அன்பை முறிக்குமாம்.....
என்னருகே வா....!!

நீ என்னிடம் தந்ததை வட்டியோடு தருகிறேன்...
முதல் அடியையும்... முதல் முத்தத்தையும்....!!!

- கண்ணகி தாசன் -

உயிர் தோழர்கள்!!!

கனாகாணும் போது தோன்றுகிறது.....
உன் கைகளோடு கைகோர்க்கும் போது தோன்றவில்லையே ஏன்???

கவி எழுதும் போது தோன்றுகிறது....
உன் காந்தப்பார்வை கண்டவுடன் தோன்றவில்லையே ஏன்???

உண்ணும் போது தோன்றுகிறது....
உன்னோடு உறங்கும் போது தோன்றவில்லையே ஏன்???

மனதுக்குள் மகிழும் போது தோன்றுகிறது...
உன் மலர்முகம் காணும் போது தோன்றவில்லையே ஏன்???

ஒருவேளை நம்மை தான் உயிர் தோழர்கள் என்பார்களோ...???

- கண்ணகி தாசன் -
சகியோடு சண்டையின் உச்சத்தில் வரைந்த கவிதை....!!!

உன் கண்களுக்குள் என்னை கண்டு பழகி விட்டதால்....
தேவைபடுவதில்லை எனக்கு கண்ணாடி.....!!!

உன் இதழ்களை அனுதினமும் உண்டு பழகி விட்டதால்..
தேவை படுவதில்லை எனக்கு உணவு...!!!

உன் மனதினில் என் காதலை செதுக்கி விட்டதால்...
தேவை படுவதில்லை என் இதயம்...!!!

எடுத்தனைதும் எடுத்துக்கொள் திருப்பி தர வேண்டாம்...!!!

விடுதலை வேண்டாத
தண்டனையை மட்டும் கொடு...!!!

-------------------------------------------------------------------------------------

உன் மரணத்தை சம்பவித்து....
விடுதலை அளித்துவிட்டாய்....
வருத்ததுடன் நான்....
கல்லறையில்....!!!

- கண்ணகி தாசன் -

கண்ட நாள் முதலாய்.....!!

உன்னில் கண்ட
கனவுகள்...

என்னில் உண்டான
மாற்றங்கள்...

ஏதோ புதிய தோற்றங்கள்...

கண்டேன் கண்ணே...
உன்னை கண்ட நாள் முதலாய்.....!!

- கண்ணகி தாசன் -
சீறும் பாம்பை போல...
பாயும் வேங்கை போல இருந்தேன்....

சிறகடிக்கும் வண்ணத்துபூச்சி போல..
பால் தரும் பசுவை போல,
தண்மைப்படுத்தினாய்..

எப்போது உண்மைப்படுத்துவாய் என்னை.....!!!

- கண்ணகி தாசன் -

விலகி போ!!!

தேர்வு எழுத முடியவில்லை...
தெம்பாய் ஒரு செயலையும் செய்ய முடிவதில்லை....!

என் தென்றலே....
தழுவாமல் தள்ளி போ!!!

உண்ண முடிவதில்லை...
உறங்க தோன்றவில்லை.....

உள்ளமே நிஜ உலகை விட்டு விட்டு....
மாய உலகை நோக்கி மாண்டு போ...!!

எண்ணங்களை ஏட்டிலே பதிக்க முடியவில்லை....
வண்ணங்களை வானிலிருந்து வசப்படுத்த முடியவில்லை....

திண்ணமாக சொல்கிறேன்....
பொன் திங்கள் நிலவே...
என்னை விட்டு நீங்கி போ...!!

ஒரு நாள் வேதனையோடு...
மறந்து போவேன்... உன்னையும்...
என் உயிரையும்...!!

- கண்ணகி தாசன் -

கடவுள்!!!!

இவன் இருக்கிறானோ...
இல்லையோ.....

நம் கவலைகளை கூற....
ஒரு உணர்வற்ற கல்....!

- கண்ணகி தாசன் -

Monday, May 16, 2011

தோல்விலேயே...
துவண்டோடிவிட்டேன்.... இருபதிந்தாண்டாய்..!!

இரங்கற்பாக்களை எழுதியே...
இளைத்து போனேன்...!! சலித்து போய் விட்டது...!!!

எப்போது எழுத போகிறேன்...
இன்பப்பாக்களை... !!!!

- கண்ணகி தாசன் -

Saturday, May 14, 2011

எழுது கோளுக்கு கூட...
பழக்கமாய் விட்டது போலும்....!!!

எதை எழுத எடுத்தாலும்.....

தானாகவே எழுதி விடுகிறது....
எனையறியாமல் உன் பெயரை....!!!!

- கண்ணகி தாசன் -

கல் மனம்!!!!!


என் கல்லறை கட்ட தேவைப்படுமாம் கற்கள்....

எனக்கு உன்னிடமுள்ள மனதை தவிர வேறதையும்..
சிபாரிசு செய்ய தோன்றவில்லை....

எவ்வளவு பார்வைகனைகளை அனுப்பியும்..
உடையவில்லையே உன் "கல் மனம்".....!!!

- கண்ணகி தாசன் -

எதனால்????

எண்ணத்தில் எழுதி வைத்தேன்.....
ஏக்கத்திற்கு சொல்லி வைத்தேன்...

வண்ணமயில்தனை தூது அனுப்பி....
வாரிக்கொண்டு வருவாயென...

திண்ணத்தணலில் தந்நிலை மறந்து....
தீம்பவாய் உன்னில் தீர்த்தம் பருக எண்ணி தீர்ந்தே போனேன்...!!

கண்ணனேன கார்மேகத்தான் எனை....
உன்னில் விதைக்க எதனால்????

- கண்ணகி தாசன் -