Monday, July 2, 2012

தமிழ் தாய்

அந்நியனிடம் போராடி...
சுதந்திரம் பெற்றோம்....!!!!

ஒன்றுப்படோம்...
உதைபட்டோம்...
உயர்ந்து நின்றோம் வீழ்ந்தாலும்...!!!

ஆனால் இன்றோ...
நம்மக்குள்ளே வேற்றுமை விரோதம்...!!!

சிந்தை தெளியவில்லையே இன்றளவும்!!!
இன்று நீ முட்டி மோதிக்கொள்வது ஒரு தாய் வயிற்று பிள்ளைகளோடு!!!

என்றாவது நினைத்திருக்கிறாயா நம் தாயை பற்றி...!!!

தமிழ்தாயோ அவசர சிகிச்சைப்பிரிவில்....
ஏதோ சில தமிழறிஞ்ர்கள் சிகிச்சையளிக்க.....
தாயோ ஏதோ...
வாழ்கிறாள் இன்றளவும் குறை உயிரோடு...!!!

பெற்ற தாயை பேணிக்காப்பது...
நம் கடமையன்றோ???

பகுடி பேச்சுக்களும் வீண் சண்டைகளும் இனியும் வேண்டாமே...!!!

தமிழை வளர்ப்போம், தரணி அளப்போம், வாருங்கள்...!!

- கண்ணகி தாசன் -