Monday, May 13, 2013

வானமென நீயிருக்க.... - அதில் 
விண்மீன் முத்துக்களாய் நான்.....

பூவுலகமென நீ பூக்க... அதை 
பாதுக்காக்கும் முட்களாய் நான்.....

காற்றாய் நீயிருக்க.... - தகிக்கும் 
அனல் கனலாய் நான்....

பிரிவாய் நீ பிறக்க.... - பிறந்தும், 
பிணமாய் அனுதினமும் நான் ....

பெற்றிடவில்லை பேரின்பம்... ஆம்!!
பெற்றிடர்வில்லை பேரின்பம்....

பிரிவின் இடரில், பெற்ற பிறவியை தொலைத்தேன்,
ஏமாளியென எனை ஏளனம் செய்யும் இச்சமுகத்தின் மத்தியில்!!!

- கண்ணகி தாசன் -   

No comments:

Post a Comment