வானமென நீயிருக்க.... - அதில்
விண்மீன் முத்துக்களாய் நான்.....
பூவுலகமென நீ பூக்க... அதை
பாதுக்காக்கும் முட்களாய் நான்.....
காற்றாய் நீயிருக்க.... - தகிக்கும்
அனல் கனலாய் நான்....
பிரிவாய் நீ பிறக்க.... - பிறந்தும்,
பிணமாய் அனுதினமும் நான் ....
பெற்றிடவில்லை பேரின்பம்... ஆம்!!
பெற்றிடர்வில்லை பேரின்பம்....
பிரிவின் இடரில், பெற்ற பிறவியை தொலைத்தேன்,
ஏமாளியென எனை ஏளனம் செய்யும் இச்சமுகத்தின் மத்தியில்!!!
- கண்ணகி தாசன் -
No comments:
Post a Comment