Tuesday, April 28, 2015

சகியோடு சண்டையின் உச்சத்தில் வரைந்த கவிதை....!!!

உன் கண்களுக்குள் என்னை கண்டு பழகி விட்டதால்....
தேவைபடுவதில்லை எனக்கு கண்ணாடி.....!!!

உன் இதழ்களை அனுதினமும் உண்டு பழகி விட்டதால்..
தேவை படுவதில்லை எனக்கு உணவு...!!!

உன் மனதினில் என் காதலை செதுக்கி விட்டதால்...
தேவை படுவதில்லை என் இதயம்...!!!

எடுத்தனைதும் எடுத்துக்கொள் திருப்பி தர வேண்டாம்...!!!

விடுதலை வேண்டாத
தண்டனையை மட்டும் கொடு...!!!

-------------------------------------------------------------------------------------

உன் மரணத்தை சம்பவித்து....
விடுதலை அளித்துவிட்டாய்....
வருத்ததுடன் நான்....
கல்லறையில்....!!!

- கண்ணகி தாசன் -
கனவிலும் கண்டதில்லை...

நினைவுகளை எனதாக்கி விட்டு...

நிஜங்களை உனதாக்கி விட்டாயே...!!!

Saturday, August 24, 2013

ஆழிகடலில் முத்தெடுத்தும் 


ஆர்பறிக்க யாருமில்லை...
அன்பு பரிமாற நேரமில்லை....

அனைத்து உறவுகள் இருந்தும்

அங்கீகாரம் நாடும் அனாதையாய் நான்....!!!


- கண்ணகி தாசன் -

Saturday, July 6, 2013

உண்மை.....

உன்னில் நானும்...
என்னில் நீயும்..

இறந்து பிறந்தோம்... உண்மையில்...

- கண்ணகி தாசன் -

Monday, May 13, 2013

வானமென நீயிருக்க.... - அதில் 
விண்மீன் முத்துக்களாய் நான்.....

பூவுலகமென நீ பூக்க... அதை 
பாதுக்காக்கும் முட்களாய் நான்.....

காற்றாய் நீயிருக்க.... - தகிக்கும் 
அனல் கனலாய் நான்....

பிரிவாய் நீ பிறக்க.... - பிறந்தும், 
பிணமாய் அனுதினமும் நான் ....

பெற்றிடவில்லை பேரின்பம்... ஆம்!!
பெற்றிடர்வில்லை பேரின்பம்....

பிரிவின் இடரில், பெற்ற பிறவியை தொலைத்தேன்,
ஏமாளியென எனை ஏளனம் செய்யும் இச்சமுகத்தின் மத்தியில்!!!

- கண்ணகி தாசன் -   
மண்ணில் பிறப்பதெல்லாம் உயிரல்ல...

உயிர்ப்பதை தவிர...!!!

- கண்ணகி தாசன் -

நெருப்பினின்றும் நீங்கா...

வெண்புகை போல.... - என் 

மறுகருவினின்றும் நீங்கா 

உன் நினைவுகள்.....!!!  

- கண்ணகி தாசன் -