Tuesday, April 28, 2015

சகியோடு சண்டையின் உச்சத்தில் வரைந்த கவிதை....!!!

உன் கண்களுக்குள் என்னை கண்டு பழகி விட்டதால்....
தேவைபடுவதில்லை எனக்கு கண்ணாடி.....!!!

உன் இதழ்களை அனுதினமும் உண்டு பழகி விட்டதால்..
தேவை படுவதில்லை எனக்கு உணவு...!!!

உன் மனதினில் என் காதலை செதுக்கி விட்டதால்...
தேவை படுவதில்லை என் இதயம்...!!!

எடுத்தனைதும் எடுத்துக்கொள் திருப்பி தர வேண்டாம்...!!!

விடுதலை வேண்டாத
தண்டனையை மட்டும் கொடு...!!!

-------------------------------------------------------------------------------------

உன் மரணத்தை சம்பவித்து....
விடுதலை அளித்துவிட்டாய்....
வருத்ததுடன் நான்....
கல்லறையில்....!!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment