Thursday, April 28, 2011

காதல் அதிசயம்...

புதுமனை புகுவிழாவில்...
பூவுக்குள் முகம் காட்டி...
புன்னகைத்தாள் என் தோழி....!!

ஆபயநி றபற்களும்... அமிழ்த இதழ்களும்..... அப்பப்பா....!!!

ஆயிரமயிரகால மளந்தாலும் அரிய படா அதிசயந்தான் காதல்...!!!

- கண்ணகி தாசன் -

அடிமையே...!!


அக்னி கோபத்தோடு வந்த என்னை, அருகிழுத்து.. அமைதிப்படுத்தினாயே..

இன்றளவும் வினவி கொண்டே தான் இருகிறேனடி...

"எப்படி அடங்கி போனேன் நானும்.....!!"

உள்ள வாக்கியம் உண்மை தான் போல....

எங்கோ படித்த ஞாபகம்...

"மாசற்ற அன்புக்கு முன்னால் அனைவரும்...
அடிமையே...!! "

- கண்ணகி தாசன் -

Wednesday, April 20, 2011

பிரிவு உபசார விழா...!!

ஆயத்தமானேன் அழுவதற்கு...!!

அரிய பல தோள்களை..
தொடர்ந்து இழந்து வருகிறேன்...!!

இன்று மட்டுமாவது.. எல்லோரிடமமும் பேசி விட முயற்சி செய்யாமல்....
மௌன கோலம் தரிக்கிறேனே...????

கைகளில் மறுபடியும் நடுக்கம்.... என்ன ஆயிற்று எனக்கு....???

எண்ணத்தில் சிகரம் தொட்ட எனக்கு...

இறைவா.. பிரிய மனமில்லை....
எங்களை கொன்றுவிடு....!!

- கண்ணகி தாசன் -



Tuesday, April 19, 2011

பிடிவாத சிந்தனைகள் - 1!!

எண்ணத்தில் எழுத நினைத்து...

எழுதுகோலை எடுத்தாலே...

எட்டி பார்த்து விடுகிறது....

உந்தன் பிடிவாத சிந்தனைகள்...!!

என்ன செய்ய நானும் மனிதன் தானே!!


- கண்ணகி தாசன் -

காதலின் பிரிவு....


பூலோகவாசம் வேண்டுமென...

இறைவனிடம் இம்சை செய்...!!
ஒருவேளை அவன் மறுத்தால்..

துயரம் கொள்ளாதே.....
நானே வருவேன் உன்னிடம் தேடி...!!!

என் உடல் மட்டுமே கிடக்கும் கல்லறையில்...

நம் காதல் என்றுமே வாழும் நினைவலையில்...!!!

- கண்ணகி தாசன் -

உன்னை சரணடைந்தேன்...

என்னிறை கண்ணதாசன் வரிகள் போல...

"சாவேனில் வாழ்வின் தேக்கம்..."

தேங்கிய குட்டையாய் உன் மனம்....

தேடித்தான் வருகிறேன் அனுதினம்...!!

- கண்ணகி தாசன் -

காரணமறியா கேள்வி....

எந்த கூடத்தில் பயின்றதோ...

அக்னி பரீட்சை எழுதுகிறதே...

அன்றாடம் மெழுகுவர்த்தி....???

- கண்ணகி தாசன் -

பிடிவாத சிந்தனைகள்!!!


நாளுக்கு நாள்...

நாடித்தான் கொல்கிறது....

உந்தன் பிடிவாத சிந்தனைகள்....!!!

- கண்ணகி தாசன் -

நினைவுகள்!!!


நினைப்பதெல்லாம் நீ என்றால்...

வெற்றுநினைவுகள் எதற்க்கடி....!!!.


- கண்ணகி தாசன் -

Tuesday, April 12, 2011

சுயநலவாதி!!!!

உந்தன் உமிழ் நீர் சுவையை விட...
அமிழ்தம் பெரிதா என்ன....???

ருசி கண்டேன்...
துகிழ் உண்டேன்....

தூயவளே.... எனை தூக்கி எறிந்து விட்டாயே...!!!

உந்தன் ஓரிரு வார்த்தைகள் போதுமடி....
ஆறுதல் என எண்ணி அமைதிபடவும் முடியும் என்னால்..!!

காவல் என எண்ணி....
கதை முடித்தாயே பெண்ணே...

உனக்கு மட்டும் மரணம்.....
எனக்கு அனுதினமும் தகனம்...!!!!

சுயநலவாதி தான் நீயும்...!!!!

- கண்ணகி தாசன் -

எதிர்மறை தகவல்!!!

கால் வயிறு கஞ்சி கூட கிடைக்காத...
ஏழைக்கு...
கம்ப்யூட்டர் இருக்கும் எதிர்காலத்தில்!!!!

- கண்ணகி தாசன் -

தீண்டாமை ஒரு பாவச்செயல்!!!!

தீண்டாமை ஒரு பாவச்செயல்....
பள்ளி பருவத்தில் படித்ததுண்டு....!!!

கற்றப்படி நடப்பது....
கடமையன்றோ...???

பொன் திங்கள் நிலவே...
புதுமலர் தேனே...

உம்!! சிக்கிரம் அருகில் வா...
தீண்டாமையை ஒழிப்போம்...!!!


-கண்ணகி தாசன்-