Monday, May 13, 2013

வானமென நீயிருக்க.... - அதில் 
விண்மீன் முத்துக்களாய் நான்.....

பூவுலகமென நீ பூக்க... அதை 
பாதுக்காக்கும் முட்களாய் நான்.....

காற்றாய் நீயிருக்க.... - தகிக்கும் 
அனல் கனலாய் நான்....

பிரிவாய் நீ பிறக்க.... - பிறந்தும், 
பிணமாய் அனுதினமும் நான் ....

பெற்றிடவில்லை பேரின்பம்... ஆம்!!
பெற்றிடர்வில்லை பேரின்பம்....

பிரிவின் இடரில், பெற்ற பிறவியை தொலைத்தேன்,
ஏமாளியென எனை ஏளனம் செய்யும் இச்சமுகத்தின் மத்தியில்!!!

- கண்ணகி தாசன் -   
மண்ணில் பிறப்பதெல்லாம் உயிரல்ல...

உயிர்ப்பதை தவிர...!!!

- கண்ணகி தாசன் -

நெருப்பினின்றும் நீங்கா...

வெண்புகை போல.... - என் 

மறுகருவினின்றும் நீங்கா 

உன் நினைவுகள்.....!!!  

- கண்ணகி தாசன் -
கருவறை மறந்து.... மிக விரைவான 

கல்லறை நோக்கிய பயணம்.....

இதுவா காதல்....????

- கண்ணகி தாசன் -
கருவறையில் இருப்பதெல்லாம் கடவுள் என்றால்,

நீயும் நானும் கடவுளே....!!!

- கண்ணகி தாசன் -