Tuesday, May 17, 2011

நீயிருந்தால்....

பூவாய் நீயிருந்தால்...
புன்னகையாய் நானிருப்பேன்...!!

புன்முறுவலோடு நீயிருந்தால்....
புகழாரம் பாடியிருப்பேன்....

புயலாய் நீயிருந்தால்....
அதில் வெந்து மடியும் புழுவாய் நானிருப்பேன்...!!

உடலாய் நீயிருந்தால்....
உருக்குலையாமல் பாதுகாத்திருப்பேன்.....!!

உயிராய் நீயிருந்தால்....
உந்தன் துதி பாடியிருப்பேன்...!!

கனவாய் மட்டுமே நீயிருந்தால்.... உளமார எழுதுகிறேன்...
கணவனோடு கண்மணியே நீ வாழ்க....!!!

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment