Thursday, June 30, 2011

எங்கே நீ...??

நீ எங்கே...
நான் தொலைந்த இடத்தில் தேடி பார்த்து விட்டேன்... 
நாம் பழகிய நாட்களில் பறையடி அடித்த உந்தையிடமும் வினவி விட்டேன்..
நீ எங்கே???
நினைவுகளை விதையாக்கி விட்டு...
நிஜங்களை திருடி சென்று விட்டாயே..
நீ எங்கே...
ஏற்றம் கண்ட நாட்களையெல்லாம்...
ஏக்கங்களால் ஏமாற்றத்தை பரிசளித்து, என்னை கொன்றவளே..
எங்கே நீ...??

நித்தமும் உன் நினைவு தான்...
நீங்கி போக நினைவுகள்...
நெஞ்சில் வஞ்சம் செய்யும் நினைவுகள்...!
 ஒரு லட்சம் வார்த்தைகள் வேண்டாம் பெண்ணே..
நெஞ்சில் வருடலாய் உன் மௌனம் பேசும்.. நம் ஆயிரம் ஆண்டு காதலை....!!


- கண்ணகி தாசன் -