Sunday, August 5, 2012

அறிமுகம்!!!

உருவம் கொடுத்தாள் அன்னை..
உயிர் கொடுத்தார் தந்தை..
தோள் கொடுத்தான் தோழன்...
உலகம் இதுவென உணர்த்தினான் தருமி...
என்னில் செந்தணல் பூக்கத்தான் செய்கிறான் பகைவன்...

எள்ளளவும் அறிவில்லாத என்னுள்...
ஏர்பூட்டி ஏற்றம் கண்டார் என் ஆசான்...

தன்னம்பிக்கை இதுவென 
காட்ட தான் என்னை சிலந்தி வாய் பசையென தொடர்வாய் தோல்விகள்...

இத்தனையிலும் இயம்பாத ஒன்றை, 
மிக அழகாய் அறிமுகபடுத்தி போனது உன் ஓர விழி பார்வை...
"காதல், பிரிவு, மரணம்,"

- கண்ணகி தாசன் -

No comments:

Post a Comment