Saturday, September 3, 2011

ஊழலை ஒழிப்போம்!!!

சுதந்திர காற்றை சுவாசிக்க..
தன் மூச்சுக்காற்றை துறந்த 
நம் தியாகிகள் அன்று...!!!

தான் வாழ, மற்றவர்களின் உயிர் பருகும் ஊழல் பெருச்சாளிகளோ இன்று... 

என் நாட்டில் யாரோ உழைக்க...
அதை அயல் நாட்டு வங்கியில் பதுக்கி  
வைத்திருக்கிறாயே.... 
உண்மையில் யாரை ஏமாற்ற நினைக்கிறாய் தெரியுமா...
நம் பாரத தாயை...!!! நம் சகோதர்களை...!! 

வளர வேண்டாவா என் பாரதம்...!!!

முகத்திரை கிழிக்கப்பட்ட அயோக்கியர்களை..
முனைப்புடன் வெட்டி ஏறிய கொண்டு வாருங்கள் வீரம் எனும் கொடுவாளை...!!

தனி மனிதனுக்கு சோறு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற என்னிறையின் கூற்றை கொண்டு.. சீர்ப்படுத்துவோம்...

இணைந்து இருப்போம்.... துணிந்து நிற்போம்... தோள் கொடுப்போம் வாருங்கள்...!!!

என் இந்தியா ஒளிரட்டும் என் இளைய தலைமுறையால்...!!!

என்றும் உங்கள் அன்புக்கு அடிமை... 
- கண்ணகிதாசன் -

No comments:

Post a Comment